Tuesday, April 14, 2009

விரோதி ஆண்டு .............

வா விரோதி ஆண்டே!!!!!!!
வா!!!!!!

நீ
நன்மைக்கு விரோதியாகமால்......
இனப்படுகொலைக்கு விரோதியாய்........
எம் உடன்பிறப்புகளின் உயிரெடுக்கும்
கொடுங்கோலுக்கு விரோதியாய்.......

நீ வரும் நேரத்தில் பார்
தமிழில் அழுபவரைக்கூட கொல்கிறார்களாம்.........
இக்காலன்களுக்கு காலனாய்.....
இருப்பாயா???

இன்று உயிர் பிழைத்தாகி விட்டோம்.......
நாளை??????????
இன்று நிம்மதியில்லை
நாளையாவது?????????
இன்று பதுங்குக்குழி
நாளை???????
வினவும்
ஒட்டுமொத்த தமிழினத்தின்
கேள்விக்குறிகளுக்கும்
விரோதியாய்.........
நீயிருப்பாய்

ஆவலில்
ஆனந்த்தில்
உன்னை வரவேறக இயலவில்லை...........
சோகத்தில்
கோபத்தில்
கொடுமையில்
இயலாமையில்
ஆதங்கத்தில்
வரவேர்கிறோம்.......

உன்னிடம் நிறைய கேட்கவில்லை
தாய்மொழியாம் தமிழில்
நிம்மதியாய் அழும்
சுதந்திரத்தையாவது
எம் இனத்திற்கு தந்து விட்டுச்செல்.......

வேதனையுடன்,
சூரியா

1 comment:

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!